For Quick Alerts
For Daily Alerts
Just In
நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதி வேண்டும்-வைகோ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞர்கள் பகவத்சிங், நடராஜன், ராஜா, ராஜேந்திரன், எழிலரசு, பாரதி ஆகியோர், தமிழை உயர் நீதிமன்ற அலுவலக மொழியாக ஆக்கிடவும், தமிழில் வழக்காடும் உரிமை கோரியும் சாகும்வரை உண்ணாநோன்பு மேற்கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதம், ஆறாவது நாளாகத் தொடர்கிறது. அவர்களது கோரிக்கை நியாயமானது. மறுமலர்ச்சி திமுக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறது.
தமிழை, நடுவண் அரசின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகவும் ஆக்கிட வேண்டும் என மதிமுக வலியுறுத்தி வந்திருக்கிறது.
ஏழு கோடித் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டிடும் வகையில், உடனடியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
Comments
Story first published: Tuesday, June 15, 2010, 12:15 [IST]