For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி பல்கலை.கள், கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை

Google Oneindia Tamil News

சென்னை: கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் க.கணேசன் வெளியிட்ட உத்தரவு:

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துகொள்வதற்கு வசதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் 23, 24 மற்றும் 25 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது.

மேலும் கோவை மாவட்டத்தில் மட்டும் கோடைகால விடுமுறைக்கு பிறகு ஜுன் 16-ந் தேதி திறக்கப்பட இருக்கும் கல்லூரிகள்-பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஜுன் 28-ந் தேதி திறக்கப்பட வேண்டும் என ஆணையிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X