Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போபால் சம்பவம்: வாஜ்பாய் அரசும் அக்கறை காட்டவில்லை-பாஜக அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

போபால்: போபால் விஷவாயு சம்பவத்துக்குப் பிறகு யூனியன் கார்பைடு ஆலை நிர்வாகிகள் சரியாக தண்டிக்கப்படாததற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈடு கிடைக்காததற்கும் அப்போதைய மத்திய-மாநில காங்கிரஸ் அரசுகளோடு, அதன் பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசும் கூட பொறுப்பேற்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச மூத்த பாஜக தலைவரும் மாநில அமைச்சருமான பாபுலால் கெளர் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் அப்போதைய மத்தியப் பிரதேச காங்கிரஸ் முதல்வர் அர்ஜுன் சிங், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, அப்போதைய வெளியுறவு அமைச்சர் நரசிம்ம ராவ் ஆகியோர் மீது பாஜக உள்பட அனைத்து தரப்பினரும் புகார் கூறி வரும் நிலையில், மத்தியில் ஆட்சி செய்த பாஜக கூட்டணி அரசு ஏன் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு அளிக்கவும் ஏற்படுத்தப்பட்ட தனித் துறையின் அமைச்சராக உள்ளார் கெளர்.

மேலும் இப்போது முதல்வர் செளஹான் வெளிநாட்டில் சுற்றுப் பயணத்தில் உள்ள நிலையில் முதல்வர் பொறுப்பையும் அவர் தான் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உமா பாரதிக்குப் பின் சிறிது காலம் முதல்வராகவும் பதவி வகித்தார் கெளர். ஆனால், உட்கட்சிப் பூசலால அவரை நீக்கியது பாஜக தலைமை.

இந் நிலையில் பாபுலால் கூறுகையில், போபால் விஷவாயுக் கசிவு சம்பவம் தொடர்பாக தனி நபரையோ தனி ஒரு அரசியல் கட்சியையோ இனியும் குறை கூறுவதில் எந்தப் பயனும் இல்லை.

காங்கிரஸ் கட்சித் தலைமையும் அப்போதைய மத்திய அரசும் கூட இதற்குக் காரணம்.

அதே போல அடுத்து ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுகூட குற்றவாளிகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரித்து தண்டிக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு அப்போதைய பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானிக்கு நான் கடிதங்கள் எழுதினேன். ஆனால், எந்த பலனும் ஏற்படவில்லை.

வரும் வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெறவுள்ள விஷவாயு விவகாரம் தொடர்பான அமைச்சர்கள் குழு கூட்டத்துக்கு வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது, இந்த விபத்து அமெரிக்காவில் நடந்திருந்தால் என்ன நஷ்டஈடு வழங்கப்பட்டிருக்குமோ அதையே போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், போபால் நகரின் அனைத்து வார்டுகளுமே பாதிக்கப்பட்டவையாகக் கருதப்பட வேண்டும் என்றும் கோருவேன் என்றார் பாபுலால் கெளர்.

ஆண்டர்சன் விவகாரம்-ராஜீவ் மீது இ.கம்யூ. குற்றச்சாட்டு:

இதற்கிடையே, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்குத் தெரியாமல் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவுக்கு சென்றிருக்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், இந்த விஷயத்தில் ராஜீவ் காந்திக்கு அவப்பெயர் வரக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி உண்மைகளை மறைக்க முயற்சிக்கிறது.

நஷ்டஈடு மசோதாவை அரசு சரியான முறையில் தயார் செய்ய இதுவே தகுந்த தருணம். போபால் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சேர்ந்துள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற டோவ் நிறுவனத்துக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+