திமுகவினரின் மணல் திருட்டால் கனிம வளம் குறைகிறது-ஜெ.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றுப் படுகைகளில் இருந்து தி.மு.க-வினரால் மணல் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கப்படு வதன் காரணமாக ஆற்று நீர் மாசுபடுவதாகவும், இவ்வாறு மாசுபடிந்த நீரை சுத்திகரிக்காமல் நீரேற்றும் நிலையங்களுக்கு எடுத்துச்சென்று குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக குழாய்கள் அடிக்கடி பழுதடைந்து போவதுடன், மாசு படிந்த நீருடன் சாக்கடை நீரும் கலக்கக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மாசு படிந்த நீரும், கழிவு நீரும் கலந்த தண்ணீரை பயன்படுத்துவதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.
தி.மு.க-வினரின் இது போன்ற மணல் கொள்ளை காரணமாக நாட்டின் கனிம வளம் குறைந்து, அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் மக்களும் பெருத்த இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
வரம்பு மீறி மணல் கொள்ளையடிப்பது குறித்தும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாதது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது மக்கள் தெரிவித்தும், அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதோடு, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரை உடனடியாக வழங்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டக்கழகத்தின் சார்பில் நாளை வெள்ளிக் கிழமை காலை 10.30 மணி அளவில், கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கழகப் பொருளாளர் ஓ. பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications