நீக்கிய மாஜி எம்எல்ஏவை மீண்டும் சேர்த்துக் கொண்ட ஜெ!
சென்னை: அதிமுகவிலிருந்து பலரும் திமுகவை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில் கட்சியை விட்டு நீக்கிய முன்னாள் எம்.எல்.ஏவை அவசரம் அவசரமாக மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார் ஜெயலலிதா.
அதிமுகவின் சாதாரண தொண்டர்கள் முதல் பெரிய பெரிய தலைவர்கள் வரை பலரும் திமுகவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரை மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கே.துளசி (ஆயிரம் விளக்கு 113-வது வட்டம்), நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கோடிமாரி ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி, தங்களை மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ள வேண்டி கொண்டதால், இன்று முதல் உறுப்பினர்களாக கழகத்தில் இணைத்து கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications