ஆன்டர்சன் பத்திரமாக வெளியேற உதவினார் நரசிம்ம ராவ்-மாஜி வெளியுறவு செயலாளர்

ராவ் செய்த ஏற்பாடுகளுக்குப் பிறகுதான் ஆன்டர்சன் பத்திரமாக நாட்டை விட்டு வெளியேறினார் என்றும் ரஸ்கோத்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து ரஸ்கோத்ரா அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆன்டர்சனை பத்திரமாக வெளியேற்றுவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் நரசிம்ம ராவ்தான். இதை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடமும் தெரிவித்தார். ராஜீவ் காந்தியும் அதை ஆட்சேபிக்கவில்லை. ராவ் செய்தவை சரிதான். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டது.
தான் பத்திரமாக வெளியேற ஏற்பாடு செய்யுமாறு அப்போதைய அமெரிக்க துணைத் தூதர் கார்டன் ஸ்டிரீப் மூலமாக இந்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார் ஆன்டர்சன். அதன் பிறகே ஆன்டர்சன் வெளியேறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இந்த விவகாரத்தை கவனிக்கும் முழுப் பொறுப்பும் ராவிடம் விடப்பட்டது. ஆன்டர்சனை முதலில் போலீஸார் கைது செய்திருந்தனர். ஆனால் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். ஆன்டர்சனை கைது செய்தது தவறு என்று ராவ் நினைத்திருக்கலாம். அதனால் அவரை விடுவிக்க கூறியிருக்கலாம். எப்படி இருந்தாலும், நாட்டின் நலன் கருதியே ஆன்டர்சன் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, அன்றைய அமெரிக்க துணைத் தூதர் ஸ்டிரீப் என்னைத் தொடர்பு கொண்டு போபால் விஷ வாயு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆன்டர்சன் இந்தியா வருவதாகவும், சம்பவ இடத்தை நேரில் பார்க்க விரும்புவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
அதற்கு நான், அவர் பத்திரமாக வந்து செல்வதை என்னால் உறுதி செய்ய முடியாது. சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி விட்டுச்சொல்கிறேன் என்று கூறினேன். பின்னர் உள்துறையுடன் பேசினேன். அமைச்சரவைச் செயலாளரிடமும் பேசினேன். அவர்களின் உத்தரவுக்காக காத்திருந்தேன். அன்றைய தினமே உத்தரவுகளும் வந்தன.
தான் தலைவராக உள்ள நிறுவனத்தில் ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. அதைக் கேள்விப்பட்டு வர விரும்புகிறார் ஆன்டர்சன். அது நியாயமானதுதான் என்பதை அரசும் உணர்ந்திருந்தது.
ஆனால் ஆன்டர்சன் இங்கு வந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டது சரியில்லை என்பது எனது எண்ணம். நமது பாதுகாப்பை கோரி அதன் பின்னர் வந்த ஒருவரைக் கைது செய்தது மோசமான செயல் என்பது அப்போது எழுந்த பரவலான கருத்து. இதனால்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஆன்டர்சனை கைது செய்ய உத்தரவிட்டது அப்போதைய ம.பி. முதல்வர் அர்ஜூன்சிங்கா, நிர்வாக அதிகாரிகளா, காவல்துறை அதிகாரிகளா என்பது எனக்குத் தெரியவில்லை என்றார் ரஸ்கோத்ரா.
இதுவரை நரசிம்மராவுக்கும் இந்த சம்பவத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த தெளிவான தகவல்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ராவ்தான் இந்த விவகாரத்தை முழுமையாக கவனித்தார், அவர்தான் இந்தியா வந்து கைதுசெய்யப்பட்ட ஆன்டர்சன் பத்திரமாக நாடு திரும்ப உதவினார் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications