ஆன்டர்சன் பத்திரமாக வெளியேற உதவினார் நரசிம்ம ராவ்-மாஜி வெளியுறவு செயலாளர்

ராவ் செய்த ஏற்பாடுகளுக்குப் பிறகுதான் ஆன்டர்சன் பத்திரமாக நாட்டை விட்டு வெளியேறினார் என்றும் ரஸ்கோத்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து ரஸ்கோத்ரா அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆன்டர்சனை பத்திரமாக வெளியேற்றுவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் நரசிம்ம ராவ்தான். இதை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடமும் தெரிவித்தார். ராஜீவ் காந்தியும் அதை ஆட்சேபிக்கவில்லை. ராவ் செய்தவை சரிதான். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டது.
தான் பத்திரமாக வெளியேற ஏற்பாடு செய்யுமாறு அப்போதைய அமெரிக்க துணைத் தூதர் கார்டன் ஸ்டிரீப் மூலமாக இந்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார் ஆன்டர்சன். அதன் பிறகே ஆன்டர்சன் வெளியேறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இந்த விவகாரத்தை கவனிக்கும் முழுப் பொறுப்பும் ராவிடம் விடப்பட்டது. ஆன்டர்சனை முதலில் போலீஸார் கைது செய்திருந்தனர். ஆனால் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். ஆன்டர்சனை கைது செய்தது தவறு என்று ராவ் நினைத்திருக்கலாம். அதனால் அவரை விடுவிக்க கூறியிருக்கலாம். எப்படி இருந்தாலும், நாட்டின் நலன் கருதியே ஆன்டர்சன் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, அன்றைய அமெரிக்க துணைத் தூதர் ஸ்டிரீப் என்னைத் தொடர்பு கொண்டு போபால் விஷ வாயு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆன்டர்சன் இந்தியா வருவதாகவும், சம்பவ இடத்தை நேரில் பார்க்க விரும்புவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
அதற்கு நான், அவர் பத்திரமாக வந்து செல்வதை என்னால் உறுதி செய்ய முடியாது. சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி விட்டுச்சொல்கிறேன் என்று கூறினேன். பின்னர் உள்துறையுடன் பேசினேன். அமைச்சரவைச் செயலாளரிடமும் பேசினேன். அவர்களின் உத்தரவுக்காக காத்திருந்தேன். அன்றைய தினமே உத்தரவுகளும் வந்தன.
தான் தலைவராக உள்ள நிறுவனத்தில் ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. அதைக் கேள்விப்பட்டு வர விரும்புகிறார் ஆன்டர்சன். அது நியாயமானதுதான் என்பதை அரசும் உணர்ந்திருந்தது.
ஆனால் ஆன்டர்சன் இங்கு வந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டது சரியில்லை என்பது எனது எண்ணம். நமது பாதுகாப்பை கோரி அதன் பின்னர் வந்த ஒருவரைக் கைது செய்தது மோசமான செயல் என்பது அப்போது எழுந்த பரவலான கருத்து. இதனால்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஆன்டர்சனை கைது செய்ய உத்தரவிட்டது அப்போதைய ம.பி. முதல்வர் அர்ஜூன்சிங்கா, நிர்வாக அதிகாரிகளா, காவல்துறை அதிகாரிகளா என்பது எனக்குத் தெரியவில்லை என்றார் ரஸ்கோத்ரா.
இதுவரை நரசிம்மராவுக்கும் இந்த சம்பவத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த தெளிவான தகவல்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ராவ்தான் இந்த விவகாரத்தை முழுமையாக கவனித்தார், அவர்தான் இந்தியா வந்து கைதுசெய்யப்பட்ட ஆன்டர்சன் பத்திரமாக நாடு திரும்ப உதவினார் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications