For Daily Alerts
Just In
அந்தமானில் நிலநடுக்கம்: சாலைகள்-கட்டடங்களில் பிளவு
இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அந்தமானின் திக்லிபூர் தீவில் கட்டடங்கள் மிக பயங்கரமாகக் குலுங்கின. பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளும் பிளவுபட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 27 கி.மீ. ஆழத்தில், அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு 180 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் தி்க்லபூரில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அது குறித்த முழு விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும் அந்தமானில் 6.1 ரி்க்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதும் அதனால் சென்னையிலும் நில அதிர்வு உருவானதும் குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, June 19, 2010, 13:52 [IST]