இலங்கை வந்துள்ள சீன கைதிகளால் ஈழத் தமிழர்களுக்கு பாதிப்பில்லை-தங்கபாலு
சென்னை: இலங்கையில் புணரமைப்பு பணிக்காக வந்துள்ள சீன கைதிகளால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் 40-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில்,
ராகுல் காந்தி தன்னலமற்ற உன்னத தலைவர். நாளை நாட்டின் தலைமை பொறுப்பை அவர் தான் ஏற்க வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய, மாநில அரசுகள் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. ஆனால், எதிர்கட்சியினரோ ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி வருகின்றனர்.
அறிக்கை மூலம் அரசியல் நடத்துபவர்களால் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடியாது. மத்திய அரசு இலங்கை தமிழர்கள் மறுவாழ்விற்காக ரூ.1000 கோடி வழங்கியகற்கு காரணம் தி.மு.க. அரசு மேற்கொண்ட முயற்சி தான் காரணம். இலங்கை தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் 50,000 வீடுகளை கட்டிக்கொடுக்கவும் மத்திய அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.
இலங்கை புணரமைப்பு பணிக்காக வந்துள்ள சீன கைதிகளால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தவறான பிரசாரம் செய்ய வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications