சீன கைதிகளால் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்து: இந்திய ஜனநாயகக் கட்சி
மதுரை: இலங்கைக்கு புணரமைப்பு பணிகளுக்காக வந்துள்ள சீன கைதிகளால் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக இந்திய ஜனநாயகக் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் ஈழத் தமிழர்கள் கடந்த 27 ஆண்டுகாலமாக இனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். போரின் முடிவில் முள்வேலி முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், புணரமைப்பு பணிகளுக்காக சீனாவில் இருந்து வந்துள்ள 25 ஆயிரம் சிறைக் கைதிகளின் அத்து மீறல்களால் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும் என ஈழத்தி்ல் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதை கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ள ஈழத்தமிழ்ர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் தலையாய கடைமைகளில் ஒன்றாகும்.
என்று பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications