தேர்தலின்போது கூட்டணி மாறும்-செங்கோட்டையன் ஆரூடம்
சென்னை: ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருக்கிறார் என சிலர் கேட்கிறார்கள். தேர்தலின்போது கூட்டணி மாறும், நிரந்தர முதல்வராக ஜெயலலிதா வருவார் என்று கூறியுள்ளார் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன்.
தமிழில் உயர்நீதிமன்றத்தில் வாதாட அனுமதி அளிக்கக் கோரி சென்னையில் நேற்று நடந்தஆர்ப்பாட்டத்தின்போது செங்கோட்டையன் பேசுகையில்,
மற்ற மாநிலங்களில் உயர்நீதிமன்றங்களில் தாய்மொழியில்தான் வாதாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி பெற்றுத்தரவில்லை.
ஜெயலலிதா என்ன செய்கிறார் என்று சிலபேர் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் வருகிற சட்டசபை தேர்தலின்போது நிச்சயமாக கூட்டணி மாறும். அப்போது தமிழ்நாட்டில் நிரந்தர முதல்வராக ஜெயலலிதா வருவார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு அனுமதி பெற்றுத் தருவார். 5-வது உலக தமிழ் மாநாட்டை எம்.ஜி.ஆர். நடத்தினார். 8-வது உலக தமிழ் மாநாட்டை நடத்தி அறிவியல் தமிழை கொண்டுவந்தவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் இன்று பல பிரச்சினைகள் உள்ளது. கல்வி கூடங்களில் சுகாதாரம் இல்லை. இதை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications