Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓகேனக்கல் குடிநீர் திட்டம்: சாம்ராஜ் நகரில் பந்த்!

Subscribe to Oneindia Tamil

Karnataka Chamarajanagar District
பெங்களூர்: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் இன்று பந்த் நடத்தப்பட்டது. இதையடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளிலிருந்து கர்நாடகம் செல்லும் வாகனங்கள் பன்னாரியி்ல் நிறுத்தப்பட்டன.

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட பல்வேறு கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந் நிலையில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இன்று பந்த் நடத்த வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

இதையடுத்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளிலிருந்து திம்பம், ஆசனூர் வழியாக கர்நாடகம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவே கர்நாடகம் பன்னாரி எல்லைப் பகுதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டன.

மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் வாகனங்கள் தலமலை வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஓசூர் வழியாக கர்நாடகம் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கப்பட்டன.

போராட்டம் வேண்டாம்-எதியூரப்பா:

இந் நிலையில் ஓகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக போராட்டம் நடத்த வேண்டாம், அந்தப் பிரச்சனையை அரசு சுமூகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாஜக அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்த இரு ஆண்டுகளில் அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் சுமுக உறவை வைத்துள்ளது. அது தொடரும்.

மாநிலங்களுக்கு இடையே பல பிரச்சனைகள் உள்ளன. அவை இப்போது ஏற்பட்ட பிரச்சனைகள் அல்ல. இந்த பிரச்சனைகளில் பலவற்றை பாஜக அரசு வந்த பிறகு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

சில பிரச்சனைகளுக்குத் தீர்வும் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் ஓகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கலுக்கும் தீர்வு காணப்படும். விரைவில் இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன், கர்நாடக தலைமைச் செயலாளர் எஸ்.வி. ரங்கநாத் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இந்தப் பிரச்சனையை அரசு சுமூகமாக பேசித் தீர்க்கவே விரும்புகிறது. எனவே, கன்னட சங்கத்தினர் யாரும் போராட்டம் நடத்த வேண்டாம்.

செம்மொழி மாநாட்டில் கர்நாடக அமைச்சர்:

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கர்நாடக அரசு சார்பில் அமைச்சர் ராமச்சந்திர கெளடா கலந்து கொள்வார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி, மூத்த அமைச்சர் ஒருவரை நேரில் அனுப்பி அழைப்பிதழ் கொடுக்கச் செய்தார்.

அவர் அன்புடன் அழைப்பிதழ் கொடுத்து இருப்பதால் நானே நேரில் சென்று கலந்து கொள்ள விரும்பினேன். ஆனால் சட்டசபை கூட்டம் தொடங்க இருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனால் கர்நாடக அரசு சார்பில் மூத்த அமைச்சரான ராமச்சந்திர கெளடாவை அனுப்பி வைக்க உள்ளேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+