For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2016ம் ஆண்டு வரை தேர்தலில் நிற்க மாட்டோம்!-சீமான்

By Chakra
Google Oneindia Tamil News

திசையன்விளை: 2016-ம் தேதி வரை நாம் தமிழர் கட்சி தேர்தலில் நிற்கப் போவதில்லை என இயக்குனர் சீமான் கூறினார்.

திசையன்விளையில் நாம் தமிழர் கட்சி கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பொன்சாம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசியதாவது:

இலங்கையில் ராஜபக்சேவை ஓட்டு மொத்த சிங்களர்களும் ஆதரித்தனர். ஆனால் பிரபாகரனை மொத்த தமிழர்களும் ஆதரிக்கவில்லை.

இங்கே காங்கிரஸ் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்டால், நாங்கள்தான் எளிதில் வெற்றி பெறுவோம்.

காமராஜர் இறந்தபின் காங்கிரசும் இறந்து விட்டது.

பாகிஸ்தான்-சீனா இரு நாடுகளும் இலங்கையில் கால் ஊன்றிவிட்டன. ராமேஸ்வரம் மீனவர்களை சிங்கள கடற்படையுடன் இணைந்து நின்று சீன வீரர்கள் சுட்டு கொல்கிறார்கள். அதை இந்தியா கண்டுகொள்ளவில்லை.

இலங்கைக்கு இந்தியா தந்த பணம் நம் தமிழ் இனத்தை அழிக்க அந்தப் பணம் உதவியது.

2016 வரை நாங்கள் தேர்தலில் நிற்க போவதில்லை. தமிழர்களை தமிழர்கள் ஆக்குவதுதான் நாங்கள் செய்யும் புரட்சி. தமிழன் என்ற உணர்வை மட்டுமே தாருங்கள். சிறைகளை கட்டியதே நமக்காகத்தான்... இதை நினைப்பில் கொண்டு இன உணர்வை பாதுகாக்க முயற்சியுங்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X