For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்

By Chakra
Google Oneindia Tamil News

சிவகாசி: பெண்களை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டிக் கேட்ட ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டார்.

திருத்தங்கலைச் சேர்ந்த ரெளடி ராஜ்குமார் மீது பல வழக்குகள் உள்ளன. 4 வழக்குகளில் தண்டனை பெற்று சிறை சென்றுள்ளார்.

இந் நிலையில் நேற்று ஆலவூரணி பகுதியில் பெண்களை 3 இளைஞர்கள் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

இதைப் பார்த்த ராஜ்குமார், அந்த வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர்களுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியானது.

இந் நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரை இளைஞர்கள் 3 பேரும் எழுப்பி, சமாதானம் பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றுள்ளனர்.

பாண்டிகோயில் அருகே அழைத்துச் சென்று திடீரென ராஜ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X