ரெளடி வெட்டிக் கொலை-பெண்களை கிண்டல் செய்த கும்பல் வெறிச்செயல்
சிவகாசி: பெண்களை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டிக் கேட்ட ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டார்.
திருத்தங்கலைச் சேர்ந்த ரெளடி ராஜ்குமார் மீது பல வழக்குகள் உள்ளன. 4 வழக்குகளில் தண்டனை பெற்று சிறை சென்றுள்ளார்.
இந் நிலையில் நேற்று ஆலவூரணி பகுதியில் பெண்களை 3 இளைஞர்கள் கேலி கிண்டல் செய்துள்ளனர்.
இதைப் பார்த்த ராஜ்குமார், அந்த வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர்களுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியானது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரை இளைஞர்கள் 3 பேரும் எழுப்பி, சமாதானம் பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றுள்ளனர்.
பாண்டிகோயில் அருகே அழைத்துச் சென்று திடீரென ராஜ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.