பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்.கே.லட்சுமணை சந்தித்து நலம் விசாரித்தார் கலாம்
மும்பை: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல கார்ட்டூன் கலைஞர் ஆர்.கே.லட்சுமணை சந்தித்து நலம் விசாரித்தார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
மும்பையில் உள்ள ப்ரீச்கண்டி மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் லட்சுமண். நுரையீரல் தொற்று, சிறுநீரகப் பிரச்சினையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை அங்கு வந்த கலாம், லட்சுமணுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் லட்சுமண் அருகில் சென்ற கலாம், ஒரு தாளில், நீங்கள் குணமடைந்து விடுவீர்கள். கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்று எழுதி லட்சுமணிடம் காண்பித்தார
அதைப் பார்த்த லட்சுமண், நன்றி என்று எழுதி தனது பாணி கையெழுத்திட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னர் கடந்த ஒரு வாரத்தில் லட்சுமணிடமிருந்து வந்த முதல் அசைவு இது என்று அவரது மகன் சீனிவாஸ் கூறியுள்ளார்.