ஓகனேக்கல் திட்டத்தை எதிர்த்து கன்னட அமைப்பினர் எல்லையில் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்று காலை தமிழக, கர்நாடக மாநில எல்லைப் பகுதியான ஜூஜூவாடியில் தேசிய நெடுஞ்சாலையில் வேதிகே அமைப்பினர் குவிந்து சாலை மறியலில் இறங்கினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இரு மாநிலங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரு மாநில பகுதிகளிலும் தேங்கி நின்றது.
தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications