தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு-பொன். ராதாகிருஷ்ணன்
ஓசூர்: தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே தமிழ்செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்துவதாக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஓசூர் அடுத்த தளியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதாக கட்சி மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த முறை ஆட்சியில் ஏழு முறை பெட்ரோல், டீஸல் விலையை உயர்த்தினர். தற்போது, இது வரை மூன்று முறை பெட்ரோல், டீஸல் விலையை உயர்த்தி உள்ளனர்.
இந்த விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விலை உயர்வு விஷம்போல் உள்ள நிலையில், மீண்டும் விலை உயர்ந்தால் சாதாரண மக்கள் வாழ்க்கை நிலை கேள்வி குறியாகும்.
பெட்ரோல், டீஸல் விலை உயர்வை வாபஸ் பெற கோரி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் தற்போது கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றது. குறிப்பாக இளைஞர்கள் அதிக அலிவில் கொலை செய்யப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். சமூக விரோத சம்பவங்களை தடுக்க முடியாத செயலற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.
தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே கோவையில் உலக தமிழ்செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்துகின்றது. தமிழ் மொழிக்கு நாங்கள் உரிய மரியாதை எப்போதும் தருவோம். ஆனால், திமுக துதிபாடும் தமிழ் மாநாட்டை தான் எதிர்கிறோம்.
திமுக அரசு துதிபாடும், வாழ்த்து பாடும் மாநாடுகளை நிறுத்திவிட்டு, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications