தேனி மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு துண்டிப்பு-நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: தேனி மாவட்டம் கூடலூர் முதல் வைகை அணை வரை உள்ள விவசாயப் பணிகளுக்கான மின் இணைப்புகளை துண்டித்திருப்பதைக் கண்டித்து நாளை தேனி மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடலூர் முதல் வைகை அணை வரை ஆற்றின் கரை அருகே சுமார் 300 விவசாய மின் இணைப்புகள் உள்ளன. நாற்பது ஆண்டு காலமாக இந்த மின் இணைப்புகளின் மூலம் மோட்டாரைப் பயன்படுத்தி மேற்படி பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதன் மூலம் 2000 விவசாயக் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.
குடிநீர்ப் பிரச்சினை வரும் போது மேற்படி விவசாய மின் இணைப்புகளை இரண்டு மாதகாலத்திற்கு துண்டிப்பது நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கம். அதன்படி, கோடை காலத்தில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேற்படி மின் இணைப்புகளை மாவட்ட நிர்வாகம் துண்டிக்கும்.
இரண்டு மாதங்கள் முடிந்தவுடன் மின் இணைப்புகளை மீண்டும் வழங்கி விடுவது வழக்கம். ஆனால், மூன்று மாதங்கள் முடிந்து விட்ட நிலையிலும் துண்டிக் கப்பட்ட மின் இணைப்பை மாவட்ட நிர்வாகம் வழங்க வில்லை.
விவசாயிகளின் வேதனை இத்துடன் நின்று விட வில்லை. ஆற்றின் கரை யோரம் உள்ள மின் இணைப்புகள், கிணறுகள், பைப் லைன்கள் அனைத் தையும் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் மேற்படி பகுதிகளின் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. ஏழை விவசாயிகளின் வாழ் வாதாரம் வதைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள், விவசாயிகள் குறை தீர்க்கும் நாளன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில், குடிநீர்ப் பிரச் சினையும் இல்லாத சூழ்நிலையில், விவசாய மின் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டியது மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் கடமையாகும்.
ஆனால், அதைச் செய்யாததோடு மட்டுமல்லாமல், மின் இணைப்பை தொடர்ந்து பெற முடியாத அளவுக்கும், மோட்டாரை பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாத அளவுக்கும் மோசமான நிலைமையை மாவட்ட ஆட்சி நிர்வாகம் உருவாக்கி இருக்கிறது. இதன் விளைவாக, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளன.
கூடலூர் முதல் வைகை அணை வரை முல்லைப் பெரியாறு ஆற்றின் கரை அருகே துண்டிக்கப்பட்டுள்ள சுமார் 300 மின் இணைப்புகளை உடனே வழங்க வலியுறுத்தி தேனி மாவட்டக் கழகத்தின் சார் பில், நாளை காலை 10 மணி அளவில், மதுரை ரோடு தேனி கனரா வங்கி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., தலைமையிலும், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications