மர உச்சியிலிருந்து வீரர்களை கண்காணித்து தாக்கினர் நக்சலைட்கள்-சிஆர்பிஎப் வீரர்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: மரங்களின் உச்சியிலிருந்து சிஆர்பிஎப் வீரர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அதிரடித் தாக்குதல்களை நக்சலைட்கள் நடத்துவதாக நக்சலைட் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்த வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்டிஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நக்சலைட்கள் நடத்திய அதிரடித்தாக்குதலில் 27 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலில் காயமடைந்து உயிர் தப்பிய வீரர் பரமானந்த் தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...

நக்சலைட்கள் மரங்களின் மீது அமர்ந்திருந்தனர். நாங்கள் அந்தப் பகுதிக்குள் வந்ததுமே துப்பாக்கிகளால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். எங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு நேரம் கொடுக்காமல் சுட ஆரம்பித்தனர்.

கிட்டத்தட்ட 2 முதல் 3 மணி நேரம் வரை துப்பாக்கிச் சூடு நடந்தது. இரு தரப்பிலிருந்தும் கடுமையாக சுட்டனர். எங்களுக்கு அதிக சேதம் நடந்ததாக நான் கூற முடியாது.நான் இருந்த பகுதியிலிருந்து சம்பவம் நடந்த இடம் சற்று தொலைவில் இருந்தது.

நாங்கள் சென்ற பகுதியில் நக்சலைட்கள் பதுங்கியிருந்தது குறித்து எங்களுக்குத் தெரியாது. ஆனால் மரங்களின் உசத்சியில் இருந்தபடி எங்களை அவர்கள் கண்காணித்து வந்தது பின்னர்தான் தெரிய வந்தது.

எங்களைத் தாக்கிய நக்சலைட் குழுவில் 200 பேர் வரை இருந்ததாக கருதுகிறோம். முழு அளவில் தயார் நிலையில்அவர்கள் இருந்தனர். எனவே எங்களைப் பற்றி முன்கூட்டியே அவர்களுக்கு துப்பு கிடைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார் பரமானந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+