அமேதி மாவட்டத்திற்குத் தலித் தலைவரின் பெயரை சூட்டினார் மாயாவதி

உ.பி மாநிலத்தில் தலித் வாக்கு வங்கியை தக்க வைக்க கடுமையாக போராடி வருகிறார் மாயாவதி. காரணம், ராகுல் காந்தி மூலமாக அங்கு தலித் வாக்கு வங்கியைத் தகர்க்க முயற்சித்து வருகிறது காங்கிரஸ்.
இதையடுத்து தலித் ஆதரவு திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து வருகிறார் மாயாவதி. இந்த நிலையில், ராகுல் காந்தி தொகுதியான அமேதி நாடாளுமன்றத் தொகுதி இடம் பெற்றுள்ள மாவட்டத்திற்கு சஹுஜி மகாராஜ் நகர் என்று தலித் தலைவர் ஒருவரின் பெயரை சூட்டியுள்ளார் மாயாவதி.
இதுகுறித்து உ.பி. அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், முதல்வர் மாயாவதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சத்ரபதி சஹுஜி மகாராஜ் நகர் என்று முன்பு இருந்த மாவட்டத்தை மீண்டும் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. இந்த மாவட்டத்துடன் அமேதியும்இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் கான்பூர் மாவட்டத்திற்கு ரமாபாய் நகர் மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ள என்றார்.
கடந்த 2002ம் ஆண்டு அப்போது இருந்த பகுஜன் சமாஜ் கட்சி அரசுதான் அமேதிக்கு தனி மாவட்ட அந்தஸ்து கொடுத்துப் பிரித்தது. அப்போது அத்தொகுதியின் உறுப்பினராக சோனியா காந்தி இருந்தார். இந்த நிலைலயில் மறுபடியும் அமேதியை பழைய மாவட்டத்துடன் இணைத்து தலித் தலைவரின் பெயரை சூட்டியுள்ளார் மாயாவதி.












Click it and Unblock the Notifications