புழல் சிறைக்கு விருப்பத்தி்ன் பேரி்ல் நளினி மாற்றம்: ஏடிஜிபி ஷ்யாம் சுந்தர்
நெல்லை: வேலூர் மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு சொந்த விருபத்தின் பேரிலேயே நளினி மாற்றப்பட்டுள்ளார் என ஏடிஜிபி ஷ்யாம் சுந்தர் தெரிவித்தார்.
சிறைத்துறை ஏடிஜிபி ஷ்யாம் சுந்தர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பாளையங்கோட்டை மத்திய சிறையில் மொத்தம் 1550 கைதிகள் உள்ளனர். இவர்களின் மன அமைதிக்காக யோகா, தியானம் போன்றவை கற்று கொடுக்கப்படுகிறது. சென்னை புறநகரில் புழல் சிறையை போல் சில ஆண்டுகளில் அனைத்து மத்திய சிறைகளும் ஊருக்கு வெளியே நவீன வசதிகளுடன் பெரிய அளவில் அமைக்கப்பட உள்ளது.கோவை மத்திய சிறை சார்பில் 47 ஏக்கர் நிலம் செம்மொழி பூங்காவிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு நளினி அவரது சொந்த விருப்பத்தின் பேரில் தான் மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில் கைதிகளுக்கு டெலிபோன் பூத் அமைப்பதற்கு அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
அனுமதி கிடைத்தவுடன் முதல்கட்டமாக அனைத்து மத்திய சிறைகளிலும் டெலிபோன் பூத் அமைக்கப்படும். பாளையங்கோட்டை சிறையில் கைதி செல்லத்துரை இறந்த சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடக்கிறது. தமிழகத்தில் 489 சிறை காவலர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். திருச்சியில் நவீன முறையில் அமையவுள்ள பெண்கள் மத்திய சிறைக்கு 123 காவலர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications