அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
சிதம்பரம்: ஆசிரியர் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் முற்றுகையில் சிக்கி 3 நாட்களாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் சிக்கித் தவித்து வருகிறது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 7 ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கங்கள் உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவினர் 1ம் தேதி முதல் இரவு பகலாக துணைவேந்தர் அலுவலக அறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்..
தமிழக அரசின் சட்டத்தையும், பல்கலைக்கழக சட்ட விதிகளையும் மீறி 69 வயதான பதிவாளரை தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளாக, பணி ஓய்வுக்கு பின்னும் பதிவாளர் பதவியில் பணி நீட்டிப்பு கொடுப்பதை கண்டித்தும், இதைப்போலவே சட்ட விதிகளுக்கு மாறாக பொறியியல் புல முதல்வராக 65 வயதான ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாக பணி ஓய்வுக்குப் பின்னும், புல முதல்வர் பதவியில் பணி நீட்டிப்பு கொடுப்பதையும், கடுமையாக எதிர்த்து கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் இளங்கோ தலைமையில் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
தற்போதைய பதிவாளர், பொறியியல் புல முதல்வர் ஆகிய இருவரையும் பணியில் இருந்து விடுவிக்கும் வரை இந்த உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் இளங்கோ தெரிவித்துள்ளார்.
இதனால் அண்ணாமலை நகரில் பதட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications