மாணவியிடம் பலாத்காரம்-கொடைக்கானல் பள்ளித் தாளாளருக்கு 15 நாள் சிறை

கொடைக்கானலில் இயங்கி வரும் கொடைக்கானல் பப்ளிக் பள்ளியில் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் ஆதரவற்ற 17 மாணவிகளும் அடக்கம்.
இம்மாணவிகள் பள்ளி தாளாளர் பிரைட் பங்களாவில் தங்கி பயின்றனர். இதில் பூடான் நாட்டு மாணவியிடம் அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதுதவிர காமுத்தாய் என்ற பெண்ணுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு பிரைட் மாற்றிக் கொண்டதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பிரைட் தலைமறைவானார்.
அதனை தொடர்ந்து தி்ண்டுக்கல் எஸ்பி முத்துசாமி தனிப்படைகள் அமைத்து பள்ளி தாளாளர் பிரைட்டை தேடி வந்த நிலையில் நேற்று மதியம் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் 2வது நீதித்துறை மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன்பு சரண் அடைந்தார்.
இதையடுத்து அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் மதுரை கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications