தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளது. இதனால் தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
நேற்று சென்னை நகர்ப் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. அதேசமயம், புறநகர்ப் பகுதிகளில் பெரிய அளவில் மழை இல்லை.
இன்றும் காலை முதல் மேக மூட்டமாக உள்ளது. சில இடங்களில் மழை பெய்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக் கடலில் விசாகப்பட்டனம் அருகே புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டமாக இருக்கும். சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications