வட மாநிலங்களில் கன மழை-பருவ மழை தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வட இந்தியா முழுவதும் நல்ல கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தலைநகர் டெல்லிக்கு தென் மேற்குப் பருவ மழை வந்து சேர்ந்துள்ளது.
பருவ மழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து வெப்பத்தின் அளவு கிடுகிடுவென குறைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. இது அப்படியே டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் தொடர்ந்தது.
கன மழை காரணமாக வட மாநிலங்கள் பலவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கன மழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
உ.பி மாநிலம் மதுராவில் பெய்த கன மழைக்கு வீடு இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 2 சிறுவர்கள் இறந்தனர். ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 3 பேர் இறந்தனர்.












Click it and Unblock the Notifications