பந்த்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி-கைதானவர்களை விடுதலை செய்க: ஜெ.
சென்னை: பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவளித்து பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
விலைவாசி, பணவீக்கம் உயர வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையையும், நடுத்தர, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையையும் உயர்த்தியுள்ள மத்திய அரசைக் கண்டித்தும், இனி வரும் காலங்களில், கச்சா எண்ணெயின் சர்வதேச விலைக்கேற்ப பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதோடு, டீசல் விலையையும் இதுபோன்று உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப் போவதாக அறிவித்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின்போது ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க.வினர் மற்றும் தோழமைக் கட்சிகளைச் சார்ந்தவர்களை கைது செய்து அவர்கள் மீது பொய் வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.
இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்து உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இத்தனையையும் மீறி, அ.தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, தி.மு.க-வினரின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயப்படாமல், இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்த வியாபாரிகள், வாகன உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் நடத்துவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும், இந்தப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திட முழு மூச்சுடன் பாடுபட்ட எனதருமைக் கழக உடன்பிறப்புகளுக்கும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், இதர அமைப்பினருக்கும், பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications