மதுரையில் சிபிஎம் அலுவலகங்களுக்கு திமுகவினர் தீ வைப்பு
மதுரை: மதுரை நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், படிப்பகம் ஆகியவற்றிற்கு திமுகவினர் தீ வைத்து விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கட்சியின் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் இரா.அண்ணா துரை விடுத்துள்ள அறிக்கை:
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு இடது சாரிக் கட்சிகள் விடுத்த அறைகூவலுக்கு அதிமுக, மதிமுக, மதச்சார்பற்ற ஜனதாதளம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் நேற்று மதுரை மாநகரில் அனைத்து கடைகளையும் அடைத்து வணிகர்களும் பொது வேலை நிறுத்தத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
மக்கள் மத்தியில் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு பெருகுவதை பொறுக்க முடியாமல், மதுரை பாரதியார் ரோட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மேலப் பொன்னகரம் பகுதிக்குழு அலுவலகத்திற்கு திமுகவினர் தீ வைத்துள்ளனர்.
இதில் அலுவலகத்தின் கதவு, விளம்பரப்பலகை ஆகியவை சேதமடைந்துள்ளது.
இதே போல் ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள கார்க்கி படிப்பகத்திற்கும் திமுகவினர் தீ வைத்துள்ளனர். இதில் படிப்பகத்தின் மேல்கூரை எரிந்துள்ளது. அருகில் இருந்த மருத்துவமனையின் காவலாளியால் இந்த தீ விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை காவல்துறையினர் அவரவர் அலுவலகங்களில் வைத்து கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து மதுரை நகரில் ஆளுங்கட்சியினர் இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மதுரை நகர காவல்துறை இது போன்ற நடவடிக்கைகளை வேடிக்கை பார்ப்பதை ஏற்க முடியாது. தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த சிலரால் மதுரையில் அது திமுகவின் ஏவல்துறையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொது வேலைநிறுத்தத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால், அவருடைய கட்சிக்காரர்கள், மதுரை நகரில் நடத்தும் வன்முறையை காவல்துறை கண்டும் காணாமல் உள்ளது.
அறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை மீறி கடமை, கண்ணியம், தட்டுப்பாடு என்ற வகையில் ஆளும் திமுகவின் நடவடிக்கைகளை பொதுமக்கள் முறியடிப்பார்கள் என்று அவர் கூறினார்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications