சிறைவாயிலில் பெண் கைதி சேலையை கழற்றி போராட்டம்-சேலத்தில் பரபரப்பு
சேலம்: போலீசார் தன் தாய் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி சேலம் பெண்கள் கிளை சிறை வாசலில் ஒரு பெண் கைதி சேலையை கழற்றி வீசி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறைச்சாலையில் சேலம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் மைதிலி அடைக்கப்பட்டு உள்ளார். மைதிலி, மேகலா, சியாமளா ஆகிய மூவரும் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் திருட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 3 பேரையும் நேற்று காலை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட பெண் போலீசார் அவர்களை சிறைச்சாலைக்கு வெளியில் அழைத்து வந்தனர். அப்போது மைதிலி திடீரென தான் உடுத்தியிருந்த சேலையை கழற்றி விட்டு, பாவாடை ஜாக்கெட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதை பாக்கு மற்றும் மூக்குபொடி பொட்டலங்களை பெண்கள் கிளை சிறைச்சாலைக்குள் வீசியதற்காக மைதிலியின் தாய் சாந்தி கைது செய்யப்பட்டார்.
தன் தாய் மீது போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாகக் கூறி மைதிலி இவ்வாறு போராட்டம் நடத்தினார்.
இது குறித்து தகவல் அறிந்த பெண்கள் கிளை சிறைக்காவலர்கள் மைதிலியை வலுக்கட்டாயமாக சிறைக்குள் அழைத்துச் சென்றனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications