ஏர் டெல்லுக்கு எதிராக யுத்தம் நடத்தும் தமிழ் ஆர்வலர்கள் !
மதுரை: இலங்கையில் ஈழ தமிழர்களை படுகொலை செய்ய காரணமாக இருந்த அந் நாட்டு அரசுக்கு பல கோடி ரூபாய் வாரிக் கொடுத்த ஏர் டெல் நிறுவனத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுதொடர்பாக எஸ்.எம்.எஸ் மூலமும் தீவிர பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழர் அமைப்புகள் வெளியிட்டுள்ள பிரசாரக் கடிதம் ஒன்றை பலருக்கும் அனுப்பி வருகின்றன.
தமிழர்களே, நாம் ஏன் ஏர் டெல் நிறுவனைத்தை புறக்கணிக்கவேண்டும் என்ற தலைப்பில் துவங்கும் அந்த கடிதத்தில், இலங்கையில் நடந்த போரில், இனவெறி இலங்கை அரசாங்கத்தின் பங்கு மட்டும் அல்ல, அதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவும் இருந்துள்ளது.
ஏனென்றால் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில் விருத்தியடைவதற்கு இதுபோன்ற நடைமுறையை பின்பற்றுவது அதிகரித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்திற்கு இந்தியாவில் 12 கோடி முகவர்கள் உள்ளார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் ஒன்றேகால் கோடி. இலங்கையில் அந்நிறுவனத்திற்கு 12 லட்சம் முகவர்கள் உள்ளனர்.
தன் தொழில் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு கூட்டு நிறுவனங்கள் ஒரு பெரும் தொகையை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளன. இதில் ஏர்டெல் நிறுவனம் மட்டும் ரூ. 1700 கோடி கொடுத்துள்ளது.
இலங்கை தமிழர்களை அழித்து ஒழிக்க இக்கூட்டு நிறுவனங்கள் பெரும் பங்கு வகித்தது. அதனால்தான் இன்று வடக்கு இலங்கையில் ஆயிரக்கணக்கான காடுகள் அழிக்கப்பட்டு கூட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தமிழர்களே ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இது போன்ற குறுஞ்செய்திகளை பலரது செல் போனுக்கும் வந்த வண்ணம் உள்ளது.
மேலும், தங்களது எதிர்ப்பை ஏர்டெல் நிறுவனத்தின் மின்னஞ்சல்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications