பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கவலைக்கிடம்-யாழ்ப்பாணத்தில் தீவிர சிகிச்சை
Subscribe to Oneindia Tamil

பார்வதி அம்மாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் சிகிச்சை பெறச் சென்ற அவர் அங்கிருந்து சென்னைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்தார். ஆனால் அவரை விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல், இந்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது.
இதையடுத்து இலங்கையின் வல்வெட்டித்துறைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் சொந்த ஊரான அங்கேயே சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில் பார்வதி அம்மாளின் நிலை மிகவும் மோசமாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும், யாழ்ப்பாணம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications