For Daily Alerts
Just In
உலக பங்குச் சந்தைகளில் உயர்வு நிலை-சென்செக்ஸும் உயர்ந்தது
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு சதவீத அளவுக்கு உயர்வு இருந்தது.
இன்றுகாலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 216 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 17,687 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 64 புள்ளிகள் உயர்ந்து 5305 ஆக இருந்தது.
இன்று அனைத்துத் துறைகளின் பங்குகளும் லாபம் கண்டன. உலோகங்கள், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் பங்குகள் அதிக சாதக நிலையைக் கண்டன.
இன்போசிஸ், ஆர்ஐஎல், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை குறிப்பிடத்தக்க லாபத்தைக் கண்ட நிறுவனங்களாகும்.
சீன மார்க்கெட்டைத் தவிர அனைத்து ஆசிய சந்தைகளும் இன்று உயர்வை கண்டன.
Story first published: Thursday, July 8, 2010, 14:25 [IST]