தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பள்ளி மாணவி ஒருவரிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உதயநேரியில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் தேவசாமித்தியம் (43).
பள்ளி வேலை நேரத்திலேயே ஆசிரியர் தேவசாமித்தியம் அங்குள்ள சத்துணவுக் கூடம் அருகே மாணவிகளிடம் சில்மிஷம் செய்வாராம்.
இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஜெயமாலா என்ற மாணவி இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அந்த மாணவியின் தாயார் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் சில்மிஷ ஆசிரியர் தேவசாமித்தியத்தை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்












Click it and Unblock the Notifications