5 செயற்கைக்கோள்களுடன் நாளை ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி-சி15

இதற்கான 51 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. நாளை ஏவப்படவுள்ள பிஸ்எல்வி-சி15 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்ன.
இந்த ராக்கெட் மொத்தம் ஐந்து செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்கிறது. அதில் ஒன்று இந்தியாவின் தொலையுணர்வு செயற்கைக் கோளான கார்டோசாட்-2பி. அதேபோல அல்ஜீரியாவின் அல்சாட், கனடா, சுவிட்சர்லாந்தின் 2 நானோ செயற்கைக் கோள்கள், அந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தயாரித்த மிகச் சிறிய அளவிலான ஸ்டுட்சாட் எனப்படும் ஒரு செயற்கைக்கோள் ஆகியவற்றை பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தவுள்ளது.
மே 9ம் தேதியே இது விண்ணில் செலுத்தப்படவிருந்தது. ஆனால் அப்போது ராக்கெட்டின் 2வது நிலையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் தள்ளி வைக்கப்பட்டு நாளை ஏவப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்எல்வி-டி3 ராக்கெட்டை இந்தியா செலுத்தியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.அதன் பின்னர் இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ள கார்டோசாட்-2பி செயற்கைக் கோளின் எடை 694 கிலோவாகும்.
நகர்ப்புறத் திட்டமிடல், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளுக்கான ஆய்வு தொடர்பாக இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. மேலும், நெடுஞ்சாலைகளைத் திட்டமிடும் பணி, ரிங் ரோடுகள் அமைக்கும் பணி ஆகியவற்றை திட்டமிடவும் இந்த செயற்கைக் கோள் உதவும்.
இதில் பொருத்தப்பட்ட கேமிரா மிகவும் அதி நவீனமானது. துல்லியமாக படம் எடுக்கக் கூடிய திறமை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications