ஆலங்குளத்தில் போட்டியிட முடிவு-தங்க வீடு தேடும் சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

ஆலங்குளம்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வருகிற சட்டசபைத் தேர்தலில் ஆலங்குளத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார். இதனால் அங்கு தங்கி பிரசாரத்தைக் கவனிக்க வசதியாக ஒரு வீடு தேடி வருகிறார்.

கடந்த லோக்சபா தேர்தலி்ன்போது ஆலங்குளத்திற்கு பிரசாரத்திற்கு வந்த சரத்குமார் வரு்ம் சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட போவதாக தெரிவித்தார். இதற்காக ஆலங்குளத்திலேயே வீடு எடுத்து தங்க போவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், கடந்த 10 நாட்களாக சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலங்குளத்தில் சரத்குமார் தங்குவதற்கு தீவிரமாக வீடு தேடி வருகின்றனர்.

இது குறித்து சரத் தரப்பு பிரமுகர் ஒருவர் கூறுகையில்,

வரும் சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட போவதாக சரத்குமார் முன்னரே தெரிவித்துள்ளார். தற்போது ஆலங்குளத்தில் தங்குவதற்காக வீடு தேர்வு செய்யும்படி கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து மாநில அமைப்பு செயலாளர் காளிதாஸ், தென்மண்டல் அமைப்பு செயலாளர் சுந்தர், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் ராபர்ட் ஆகியோர் தீவிரமாக வீடு தேடி வருகின்றனர். போக்குவரத்தி்ற்கு எளிதாகவும், வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாகவும் உள்ள வீடு ஒன்றை தேர்வு செய்யும்படி சரத்குமார் கூறியுள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+