சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்-சென்னை, ஓசூர், காஞ்சிபுரம் மக்கள் வியப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று முற்பகலில் சூரியனைச் சுற்றிலும் ஒளிவட்டம் தெரிந்ததால் மக்கள் வியப்படைந்து அதை வேடிக்கை பார்த்தனர்.

சென்னை, ஓசூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று முற்பகல் 11 மணியளவில் சூரியனைச் சுற்றி கருமை நிறத்தில் ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. இதை மக்கள் வியப்புடன் பார்த்தனர். சிலர் இதனால் ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என பயந்தனர்.

இதுகுறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் ஐயம் பெருமால் கூறுகையில், பூமிக்கும்,சூரியனுக்கும் இடையே கிட்டத்தட்ட 15 கோடி கிலோமீட்டர் தூரம் உள்ளது.

சில நேரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருந்தால் அதனால் ஏற்படும் பிரதிபலிப்பு காரணமாகஇப்படி ஒளிவட்டம் ஏற்படும். இதை சூரிய ஒளிவட்டம் என்பார்கள். இதனால் எந்தவிதமான ஆபத்தும் நேரிடாது.

வளிமண்டல ஈரப்பதம் காரணமாகவே இது ஏற்பட்டது. வேறு ஒன்றும் இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+