குற்றாலத்தில் போதையில் தகராறு செய்த போலீ்ஸ்காரர் உள்பட 12 பேர் கைது
தென்காசி: குடிபோதையில் சுற்றுலா பயணிகளிடம் ரகளை செய்த ஒரு போலீஸ்காரர் உள்பட 12 பேரை குற்றாலம் போலீஸார் கைது செய்தனர்.
குற்றாலத்தில் சுறறுலா பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும், பெண்களை கேலி செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஆஸ்ரா கர்க் தெரிவித்தார்.
இதனை அடுத்து குற்றாலம் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கடந்த ஒரு வாரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்ளை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று குற்றாலம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவனு ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது பழைய குற்றாலம் செல்லும் வழியில் குடித்து விட்டு சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக தகராறு செய்து கொண்டிருந்த விருதுநகர் ஆயுதபடை போலீஸ் காவலர் குடியிருப்பை சேர்ந்த சுப்பையா மகன் சங்கர் என்பவரை கைது செய்தனர்.
சங்கர் விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இதே போன்று போதையில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு செய்த மேலும் 11 பேரையும் கைது செய்தனர்.