ஷார்ஜாவில் இந்திய பெண் கற்பழிப்பு: நகராட்சி ஊழியருக்கு 10 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் இந்திய பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். அவரைக் கற்பழித்த நகராட்சி ஊழியருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். இந்த நிலையில், அங்கு தங்கியிருந்த இந்திய பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். அவரின் வீட்டுக்குள் புகுந்த நகரசபை ஊழியர் ஒருவர் அவரை கற்பழித்துள்ளார்.
25 வயதான அந்த ஊழியர் எகிப்தை சேர்ந்தவர். இது தொடர்பாக, அவர் மீது ஷார்ஜாவில் உள்ள ஷரியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications