35 லட்சம் ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு-மத்திய அரசு!

இப்போது வீடுகளுக்கு சமையல் கேஸ் இணைப்பு வழங்க ரூ.1,250 டெபாசிட் கட்டணமும் ரூ.150 ரெகுலேட்டர் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இந்த தொகையை மானியமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஏழைகள் டெபாசிட் பணம் ஏதும் கட்டாமலேயே இலவச இணைப்பு பெறலாம்.
முதற்கட்டமாக 35 லட்சம் ஏழைகளுக்கு மானிய விலையில் கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கு ரூ.490 கோடி செலவாகும்.
இது குறி்த்து பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா கூறுகையில், ராஜீவ் காந்தி கிராம கேஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக 35 லட்சம் இணைப்பு வழங்கப்படும். பின்னர் இதை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளோம்.
தற்போது நகரம் மற்றும் சிறு நகர பகுதிகளிலேயே கேஸ் இணைப்புகள் கிடைக்கிறது. கிராம பகுதிகளிலும் இணைப்பு கிடைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications