For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

Google Oneindia Tamil News

ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. இதனால், அந்த பகுதி மக்கள் எப்பொழுது நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற பயத்திலேயே வாழ்கின்றனர்.

இந் நிலையில் நேற்று முன்தினம் சுமத்ரா தீவு பகுதிகளில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பயம் போவதற்குள் இன்று காலை 6.5 மணிக்கு பாபுவா பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கட்டிடங்களும், வீடுகளும் அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். சிறிது நேரம் கழித்து வீடுகளுக்கு திரும்பினர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் பாபுவா பகுதியில் உள்ள ஜெயபுராவில் பூமிக்கு அடியில் 13 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கங்களால் உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X