கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பேங்க் சுப்பிரமணியனை நீக்க கோரிக்கை
கரூர்: கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரணியனை அந்த பதவியில் இருந்து நீக்க சேவாதள நிர்வாகிகள் சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கரூர் மாவட்ட சேவாதள மாவட்ட தலைமை அமைப்பாளர் ராஜேஷ் கூறியதாவது:
கரூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள புதிய தலைமை அமைப்பாளராக செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.
அகில இந்திய சேவாதள தலைவரின் ஒப்புதல் பெற்றே, மாவட்ட தலைவரை, மாநில தலைவர் நியமிக்க வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் சேவாதள தலைவர் மகேந்திர ஜோஷி, கரூர் மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளரான என்னை மாற்ற ஒப்புதல் அளிக்கவில்லை.
மேலும், இது குறித்து குறித்து மாநில சேவாதள பொறுப்பாளர் மக்னாய்க்கிடம் பேசவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், பேங்க் சுப்பிரமணியம், மாவட்ட சேவாதளத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில், கட்சியினர் மத்தியில் பொது மக்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் தவறான தகவலை கொடுத்துள்ளார்.
எனவே, கட்சி நலன் கருதி கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியனை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
இதே கருத்தை முன்வைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் இந்த புகாரை சேவாதள நிர்வாகிகள் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications