மணப்பாறை மருத்துவமனை மீது சிறுநீரகத்தை திருடியதாக புகார்!
Subscribe to Oneindia Tamil
மணப்பாறை: மணப்பாறையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது அவருக்கு தெரியாமல் கிட்னியை எடுத்துவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கரூர் மாவட்டம், பாப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி பானுமதி. இவருக்கு கர்பப்ப பையில் அடிக்கடி வலி மற்றும் கோளாறு இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து, இவர் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது கர்பப்ப பை ஆபரேஷன் செய்வதாக கூறி, தனது வலது பக்கத்தில் உள்ள சிறுநீரகத்தை அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் எடுத்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் காவல் நிலையத்திலும், தமிழக முதல்வர் குறைதீர்ப்புப் பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications