தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி
சென்னை: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தர்மபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கல்லூரியின் வசதிகளை இந்திய மருத்துவக் கவுன்சில் குழு ஆய்வு செய்தே மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்து வருகிறது.
இந்த ஆண்டும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் புதிய குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் கல்லூரியை ஆய்வு செய்தனர். இதையடுத்து மாணவர்களைச் சேர்க்க நேற்று அனுமதி அளித்தனர்.
இந்தக் கல்லூரியின் மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இதில் தமிழக மாணவர்களுக்கு 85 இடங்கள் ஒதுக்கப்படும்.
அதே போல விழுப்புரம், திருவாரூர் ஆகிய புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கவும் இந்திய மருத்துவக் கவுன்சில் நேற்று முன் தினம் அனுமதி அளித்தது.
இதன்மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு 255 இடங்கள் கிடைத்துள்ளன.
இந்த இடங்கள் சென்னையில் ஜூலை 21ம் தேதி நடைபெறும் எம்பிபிஎஸ் 2ம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும்.
விழுப்புரம், திருவாரூர் அரசு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்த்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளன.
இதில் மொத்தம் 2,237 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 292 இடங்கள் போக தமிழக ஒதுக்கீட்டுக்கு 1,945 இடங்கள் உள்ளன.
முதல் கட்ட கவுன்சிலிங்கின்போது 14 அரசு மருத்துவக் கல்லூரிகளின் இருந்த 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே சென்னை வண்டலூர் அருகே கட்டப்பட்டுள்ள தாகூர் தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இங்கு மொத்தம் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இங்கு தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கு 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications