இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் 36% சரிவு

வளர்ச்சியடைந்த நாடுகள் பொருளாதார மந்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடாததே முதலீட்டில் ஏற்பட்ட சரிவுக்குக் காரணமாகும்.
இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கூட்டுத் திட்டங்கள், துணை நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் நேரடி முதலீடுகளை செய்து வருகின்றன.
சென்ற நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த அன்னிய முதலீட்டில் 43 சதவீதம், உற்பத்தி துறை சார்ந்த திட்டங்களில் செய்யப்பட்டுள்ளது.
நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் மற்றும் சேவை துறைகளில் 28 சதவீதம் முதலீடு செய்ய�பட்டுள்ளது.
சென்ற நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூர், மொரீஷியஸ், நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் அதிக அளவில் முதலீடுகளைச் செய்துள்ளன.
மொத்த முதலீட்டில் 67 சதவீதம் இந்த நாடுகளில் தான் செய்யப்பட்டுள்ளது. அதிலும் பெரும் பகுதி நிதி சிங்கப்பூர் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளில்தான் தான் முதலீடாகியுள்ளது.
இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரில் செய்த முதலீடு 36 சதவீதம் உயர்ந்துள்ளது. மொரீஷியஸ் நாட்டில் செய்யப்பட்ட முதலீடு 12.8 சதவீதம். அமெரிக்க நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடு 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பிற நாடுகளில் செய்யப்பட்ட முதலீடு பெருமளவு குறைந்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து முதலீடுகள் மிகப் பெருமளவில் சரிந்துள்ளன.
இதற்கிடையே இந்தியா-சிங்கப்பூர் இடையிலான வர்த்தகம் 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி-ஜுன் மாத காலத்தில் மட்டும் ரூ.50,500 கோடியளவுக்கு இரு நாட்டு வர்த்தம் நடந்துள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 45 சதவீதம் அதிகமாகும்.
இந் நிலையி்ல் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் சென்ற மே மாதத்தில் மட்டும் ரூ.10,200 கோடி முதலீடு செய்துள்ளன. இது,கடந்த ஆண்டைவிட 5.6 சதவீதம் அதிகமாகும்.












Click it and Unblock the Notifications