குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

குலசேகரம்: குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குலசேகரம் அருகே கொச்சுவீட்டு பாறை சானல்கரையை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மனோன்மணி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீ்ட்டிற்குள் புகுந்து அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பியோடினர்.

இது குறித்து மனோன்மணி குலசேகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சந்தேகத்தி்ன் பேரில் மனோன்மணியின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஸ்டாலின் ஜோஸ் என்பவரை பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று டிபன் சாப்பிடுவதற்காக ஸ்டாலின் ஜோஸ் கைவிலங்கை போலீசார் அவிழ்த்து விட்டுள்ளனர்.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவர் ஸ்டேஷனின் பின்பக்க வாசல் வழியாக தப்பியோடியுள்ளார். விரட்டி சென்றும் போலீசாரால் அவரை பிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+