மொய்லிக்கு எதிராக போராட்டம்-மாணவர்கள் கைது !
வேலூர்: மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு எதிராக போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சட்டம் படித்து முடித்த மாணவர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு வழக்கறிஞராக பயிற்சியில் ஈடுபடலாம் என்ற நடைமுறை இதுவரை இருந்து வந்தது.
ஆனால், இந்த நடைமுறையில் திருத்தம் செய்துள்ளது பார் கவுன்சில். சட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் இனி வரும் காலத்தில் 6 மாதத்துக்கு ஒரு முறை நடைபெறும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியும் என அறிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி-க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காட்பாடி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காட்பாடி சில்க்மில் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 28 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications