மாணவர்கள் ஸ்டிரைக்-பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மூடல்
பாபநாசம்: மாணவர்கள் ஸ்டிரைக் காரணமாக, பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி
காலவரையின்றி மூடப்பட்டது.
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து
வருகின்றனர். இக்கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ரெகுலர்
பிரிவு மாணவர்களுக்கும், 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சுயநிதி பிரிவு
மாணவர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரெகுலர் பிரிவில் பயிலும் மாணவர்கள் கல்லூரி தினமும் காலை 10
மணிக்கு துவங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரியில் நேற்று உள்ளிருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மாணவர்கள் இரண்டாவது நாளாக கல்லூரி முன்பு கூடி மாணவர்களின் கோரிக்கையை
நிறைவேற்ற வேண்டும் என கோஷிமிட்டனர். இதையடுத்து கல்லூரி காலவரையின்றி
மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் இதை ஏற்காத மாணவர்கள் கல்லூரியை திறக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால்
பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications