கும்பகோணம் பள்ளி தீ விபத்து 6 ம் ஆண்டு நினைவு தினம்-மக்கள் மலரஞ்சலி

கும்பகோணத்தில் கடந்த 2004 ம் ஆண்டு ஜூலை 16 ம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக கருகி பலியானார்கள். மேலும், 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர சம்பவத்தை கண்டு தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
பள்ளி குழந்தைகள் தீ விபத்தில் பலியான சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை 6.30 மணிக்கு கும்பகோணம் காசிராமன் தெருவில் தீ விபத்துக்குள்ளான பள்ளி முன்பு இறந்து போன குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.
பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமகவினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல இதற்கென அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அமைச்சர் கோ.சி.மணி அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோரும், பொதுமக்களும், கும்பகோணம் தீவிபத்து நினைவுதினமான ஜூலை 16ம் தேதியை ஆண்டுதோறும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க கோரினர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications