முல்லைப் பெரியாறில் புதிய அணை-சர்வே முடிந்ததாக கேரளா அறிவிப்பு

கேரள சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எதிர்கட்சி உறுப்பினர் அப்துல்லா குட்டி முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வு பணி குறித்து கேட்டார்.
அதற்கு மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் பதிலளித்து பேசுகையில்,
முல்லைபெரியாறு பிரச்சனைக்கு புதிய அணை கட்டுவதுதான் ஓரே தீர்வு. புதிய அணைக்கான நில ஆய்வு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
தற்போது உள்ள அணையில் இருந்து 366 மீ தொலைவில் பெரியார் புலிகள் சாரணாலய பகுதி உட்பட வனப்பகுதியில் நடத்தப்பட்டு வந்த நில ஆய்வு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இங்கு மண் பரிசோதனையும் முடிக்கப்பட்டுள்ளது.
5 இடங்களில் துளை போட்டு பாறையின் உறுதி தன்மை சோதிக்கப்பட்டது. மேலும் புவி ஆராய்ச்சி துறை கேட்டு கொண்டதின் பேரில் மேலும் 10 இடங்களில் துளையிட்டு பாறை உறுதி தன்மை பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதற்காக விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications