தமிழக மீனவர்களைக் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்-அதிமுக
சென்னை: இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் வதைபடுவதைத் தவிர்க்க கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும் என்று அதிமுக கோரியுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், இதைத் தடுக்க முயலாத தமிழக, மத்திய அரசுகளைக் கண்டித்தும் சென்னையில் இன்று எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ஜெயக்குமார் பேசுகையில்,
மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த 4 ஆண்டுகளாக இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
மீனவர்கள் கடலில் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ. 14 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி ஈட்டி தருகிறார்கள். ஆனால் அவர்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்கள கடற்படையால் தினம் தினம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். தமிழக மீனவர்களை காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications