மு.க.அழகிரியின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு-ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்க அனுமதி

ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அமைச்சர்கள் பேச முடியும் என்று விதியை வைத்துள்ளனர். இதுகுறித்து நீண்ட காலமாகவே சர்ச்சை நி்லவி வருகிறது. இந்தியாவில் பல மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் நிலையில் ஏன் இந்தத் தடை என்று பிரச்சினை எழுப்பப்பட்டது.
இதையடுத்து உறுப்பினர்கள் (எம்.பிக்கள்) எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம், கேள்வி கேட்கலாம் என இந்த விதியில் தளர்வு செய்யப்பட்டது. இருப்பினும் அமைச்சர்கள் மட்டும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச முடியும்.
இந்த விதிமுறையால் அஞ்சா நெஞ்சர் என திமுக தொண்டர்களால் செல்லமாக அழைக்கப்படும் மு.க.அழகிரிக்கு நாடாளுமன்றம் என்றாலே அலர்ஜியாகி விட்டது.
இரு மொழிகளிலும் அவருக்குப் புலமை போதாது என்பதால் நாடாளுமன்றக் கூட்டங்களில் அழகிரியால் கலந்து கொள்ள முடியாத நிலை. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அழகிரிக்குப் பதில் இணை அமைச்சரான ஸ்ரீகாந்த் ஜெனாவே பதிலளித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அழகிரியின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்றக் கூட்டங்களில் இனி அழகிரி எந்தவித பயமும் இல்லாமல் வந்து போக முடியும். லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ள புதிய திட்டத்தின்படி, ரசாயாணத்துறை தொடர்பாக கேட்கப்படும் முக்கியக் கேள்விகளுக்கான ஆங்கில பதிலை அழகிரி எழுதி வைத்து வாசிப்பார். துணைக் கேள்விளுக்கு இணை அமைச்சர் ஜெனா பதிலளிப்பார்.
இதன் மூலம் அழகிரியின் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications