Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவிலிருந்து எந்தத் தூதரும் வரத் தேவையில்லை: இலங்கை அமைச்சர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

Alahapperuma
கொழும்பு: இலங்கை அரசு தனது வேலையையும், பொறுப்பையும் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறது. எனவே இந்தியாவிலிருந்து எந்த சிறப்புத் தூதரும் இங்கு வர வேண்டிய தேவையில்லை என்று இலங்கை அமைச்சர் டல்லாஸ் அழகப்பெருமா பேசியுள்ளார்.

தமிழர் மறு நிவாரணப் பணிகளில் இலங்கை அரசு சரிவர செயல்படாமல் உள்ளது. எனவே அங்கு சிறப்புத் தூதரை அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அழகப்பெருமா மூலம் இலங்கை பதிலளித்துள்ளது. இதுகுறித்து அழகப்பெருமா கூறுகையில்,

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் சிறந்த புரிந்துணர்வும், உறவும் உள்ளது. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில்கூட இந்தியா இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. இந்தியாவுடனான உறவு உலகில் வேறு எந்த நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை விட சிறந்ததாகும்.

தமிழ் மக்களின் மறுகுடியமர்வு தொடர்பாக அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே இலங்கை நிலைமை தொடர்பாக ஆராய இந்தியாவிலிருந்து சிறப்புத்தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் அழகப்பெருமா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+